Wednesday, December 1, 2010

மௌனமே...

மலையில் மேகம் உரசுகையில்...
மொட்டு மலர்கையில்...
உயிர் பெற்ற பிள்ளை
உலகை வந்ததறிந்து அழும் முன்
முதல் நொடியில்...
இரயில் ஓடா தண்டவாளம் தொட்டு
செல்லும் தென்றலில்...
ஆயிரம் அர்த்தம் அடக்கிய
ஆளில்லா திண்ணைகளில்...
அளந்த ஆனந்தம்
அடங்கிபோனதடி  உன் மௌனத்தில்..