Wednesday, December 1, 2010

மௌனமே...

மலையில் மேகம் உரசுகையில்...
மொட்டு மலர்கையில்...
உயிர் பெற்ற பிள்ளை
உலகை வந்ததறிந்து அழும் முன்
முதல் நொடியில்...
இரயில் ஓடா தண்டவாளம் தொட்டு
செல்லும் தென்றலில்...
ஆயிரம் அர்த்தம் அடக்கிய
ஆளில்லா திண்ணைகளில்...
அளந்த ஆனந்தம்
அடங்கிபோனதடி  உன் மௌனத்தில்..

Monday, November 8, 2010

பத்தாவது மாடியில் இருந்து....

வண்டி புகை தாண்டி
வானத்தின்  நிஜவாசம் வேண்டி


சத்த சாம்ராஜ்யத்தில்  இருந்து  ஒழிந்து
மௌன கீதம்  ருசிக்க


தேடி  கண்டறிந்து  குடிபுகுந்தேன்
எட்டாத  மாடியில்

மறந்துவிட்டேன் ஒன்றை மட்டும்
மின்சாரம்  போனதென்றால் என்
நினைப்பு  மாறிபோகும் என

உயர்ந்த  வாழ்க்கையை தவறி புரிந்தேன் என